சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவுநாளையொட்டி, இன்று (06/12/2021) டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்த்தூவி மரியாதைசெலுத்தினர். அதைத் தொடர்ந்து, மக்களவை சபாநயாகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.

Advertisment

பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.