ADVERTISEMENT

கரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்ட கேரளா!

07:48 PM Jul 14, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

ADVERTISEMENT

இன்று மட்டும் கேரளாவில் 608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 138 பேர் வெளிநாட்டில் இருந்தும், 51 பேர் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வந்தவர்கள். பலருக்கு தொடர்புகள் மூலம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 28 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,930ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4,454 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 4500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT