Advertisment

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - கழுத்தறுத்து கொலை!

ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Child

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

ஹரியானா மாநிலத்தில் உள்ளது யமுனாநகர் பகுதி. இங்குள்ள பெலாகர் கிராமத்தில் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். அங்குள்ள பண்ணை வீட்டில் அவர்கள் தங்குவதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பண்ணைவீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பண்ணைவீட்டிற்கு அருகில் உள்ள குழிக்குள் சிறுமி கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. சிறுமியின் பிறப்புறுப்பு கிழிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பண்ணைவீடு இருக்கும் பகுதியில் யாரும் நுழையமுடியாது என்பதால், அங்குள்ள யாரோதான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என சந்தேகிக்கித்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளி மீது போக்ஸோ, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர், கூடியவிரைவில் கைதுசெய்வோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.

haryana sexual harassment Child rape Child abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe