காஷ்மீரில் அல்கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய ஆறு பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடியுள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்த, பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.