Skip to main content

பப்புக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... சிசிடிவி காட்சியால் சிக்கிய 6 மாணவர்கள்!

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

6 students caught by CCTV footage!

 

பப்புக்கு தோழிகளுடன் சென்ற 17 வயது மாணவி ஆறு மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த மே 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பப்புக்கு 17 வயது சிறுமி ஒருவர் அவரது தோழிகளுடன் சென்றுள்ளார். உடன் வந்த தோழிகள் பப்பை விட்டு வெளியே சென்ற பிறகும் அங்கிருந்த மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி, காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக மாணவர்கள் கூறியதை நம்பி அவர்களுடன் பென்ஸ் காரில் சென்றுள்ளார். பள்ளி மாணவியை ஏற்றிக்கொண்டு மாணவர்களுடன் சென்ற அந்த கார் முதலில் ஒரு பேக்கரியில் நின்றதாகவும், அதன் பிறகு ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் காரில் இருந்த மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி மாணவியை ஒரு இடத்தில் இறக்கி விட்ட பின் கார் சென்றுள்ளது.

 

வீடு திரும்பிய மாணவி கழுத்தில் காயம் இருப்பதைக் கண்ட சிறுமியின் தந்தை இதுகுறித்து மகளிடம் விசாரித்துள்ளார். விசாரணையில் சிலர் தாக்கியதாகச் சிறுமி மழுப்பலாக பதில் கூற, சிறுமியின் தந்தை இது குறித்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சிறுமியிடம் பெண் காவலர்கள் விசாரணை நடத்தியதில் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டவர்களில் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரின் மகன் என்றும், அதேபோல் வக்ப் வாரியத் தலைவரின் மகன் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பப்புக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், மாணவியுடன் வெளியே நடந்து செல்லும் அந்த மாணவர்கள் யார் யார் என்பது குறித்த அடையாளங்களை சேகரித்தனர். மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சாதுத்தீன் மாலிக் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்கானாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.