Skip to main content

6 பி.எஸ்.பி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்... அதிர்ச்சியில் மாயாவதி!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019


ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன் முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்த நிலையில் மாயாவதியின் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகளாக வெற்றிபெற்ற சில எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று இரவு தாவினர்.


இந்நிலையில், உதைய்பூர்வதி தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ராஜேந்திர குட், நத்பய் தொகுதி எம்எல்ஏ ஜோகேந்திர சிங் அவானா, லக்கான் சிங் மீனா (கரோலி) உள்ளிட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர். இவர்கள் 6 பேரும் முதல்வர் அசோக் கெலாட்டுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று சட்டசபை சபாநாயகர் சிபி ஜோஷியை சந்தித்து தாங்கள் 6 பேரும் காங்கிரஸில் இணைந்துள்ளது குறித்த கடிதத்தை அளித்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உ.பி அரசியல் குழப்பம்; சமாஜ்வாதி மீது மாயாவதி குற்றச்சாட்டு...

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

mayavati akilesh yadav

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களை வென்றது. அதன்பிறகு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 12 எம்எல்ஏக்களை தனது கட்சியிலிருந்து மாயாவதி நீக்கினார்.

 

இதனையடுத்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், சபாநாயகரை சந்தித்து தங்களைத் தனிக் குழுவாகவோ அல்லது கட்சியாகவோ கருதுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் அளித்தனர். மேலும், 12 எம்.எல்.ஏக்களில் ஒன்பது பேர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசினர். இதனையடுத்து, அவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. அடுத்தாண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது மாயாவதிக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.

 

இந்நிலையில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள், சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாக வெளியான தகவல்கள் தொடர்பா, சமாஜ்வாதி கட்சியை மாயாவதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் சிலர் சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாக அக்கட்சி திட்டமிட்டு தகவல்களைப் பரப்பி வருகிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களை நாங்கள் நீண்டகாலத்திற்கு முன்பாகவே இடைநீக்கம் செய்துவிட்டோம்.

 

மாநிலங்களவைத் தேர்தலில் தலித் தலைவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து சதி செய்ததால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் மீது சமாஜ்வாதி கட்சிக்கு கொஞ்சமாவது கரிசனம் இருந்திருக்குமானால் அவர்களை அங்கும், இங்கும் தொங்கலில் விட்டிருக்கமாட்டார்கள். பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை சமாஜ்வாதி கட்சியில் சேர்த்தால், அந்த கட்சி பிளவு பட்டுவிடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்" எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏவை சஸ்பெண்ட் செய்து மாயாவதி அதிரடி!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று மாலை 07.30 மணியளவில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசுக்கு எதிராக உறுப்பினர்கள் அதிகளவில் வாக்களித்ததால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதனை தொடர்ந்து குமாரசாமி நேற்று இரவு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். குமாரசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுருந்தது. இந்நிலையில் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் அரசு கவிழ்ந்ததால், முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.  

 

karnataka floor test not participate bsp party mla mahesh suspended announced party president mayavati

 

கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மகேஷ் கொல்லேகல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் முந்தைய குமாரசாமி அரசுக்கு, தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகேஷ், ஆதரவு அளிப்பார் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மகேஷ் எம்.எல்.ஏ முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் குமாரசாமி அரசுக்கு மறைமுக எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, கட்சி தலைமை உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத மகேஷ் எம்.எல்.ஏவை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.