Skip to main content

தடுப்பூசிகள் மீதான 5 சதவீத வரி தொடரும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

NIRMALA SITHARAMAN

 

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. அனைத்து மாநில/ யூனியன் பிரதேச நிதியமைச்சர்களும் கலந்துகொண்டனர். கடந்த முறை நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தடுப்பூசிகள் உள்ளிட்டவைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வரி விலக்கு கேட்டன.

 

இருப்பினும் தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கரோனா தடுப்பூசி மற்றும் பிற பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரியை குறைப்பது குறித்து பரிந்துரைக்க ஒரு சில மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையை ஜூன் 8 ஆம் தேதி வழங்கியது.  இதனையடுத்து இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கரோனா தடுப்பூசியின் மேல் விதிக்கப்பட்ட 5 ஜி.எஸ்.டி குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. 

 

இந்தநிலையில் இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பேசியமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா தடுப்பூசிகளுக்கான ஐந்து சதவீத ஜி.எஸ்.டி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், "அறிவித்தபடி மத்திய அரசு 75% தடுப்பூசியை வாங்கும். அதற்கான ஜிஎஸ்டியையும் செலுத்தும். ஆனால் ஜிஎஸ்டியிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுடன் பகிரப்படும்" என கூறியுள்ளார்.

 

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கருப்பு பூஞ்சைமருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துக்கான ஜி.எஸ்.டி 12 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார உலைகள் மற்றும் வெப்பநிலை சோதனை உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆகவும், ஆம்புலன்ஸ் மீதான 12% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதங்கள் அமைச்சர்கள் குழு பரிந்துரைப்படி  செப்டம்பர் இறுதிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மருத்துவ தர ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் / ஜெனரேட்டர்கள் (தனிப்பட்ட இறக்குமதிகள் உட்பட), வென்டிலேட்டர்கள், வென்டிலேட்டர் மாஸ்க்குகள், பைபாப் இயந்திரம், கரோனா பரிசோதனை கிட்டுகள், ஆக்சிமீட்டர் (தனிப்பட்ட இறக்குமதி உட்பட) ஆகிய பொருட்கள்மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 12 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்படுள்ளன. சானிடைஸிர் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் செப்டம்பர் இறுதிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.