Skip to main content

தடுப்பூசிகள் மீதான 5 சதவீத வரி தொடரும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

NIRMALA SITHARAMAN

 

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. அனைத்து மாநில/ யூனியன் பிரதேச நிதியமைச்சர்களும் கலந்துகொண்டனர். கடந்த முறை நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தடுப்பூசிகள் உள்ளிட்டவைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வரி விலக்கு கேட்டன.

 

இருப்பினும் தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கரோனா தடுப்பூசி மற்றும் பிற பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரியை குறைப்பது குறித்து பரிந்துரைக்க ஒரு சில மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையை ஜூன் 8 ஆம் தேதி வழங்கியது.  இதனையடுத்து இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கரோனா தடுப்பூசியின் மேல் விதிக்கப்பட்ட 5 ஜி.எஸ்.டி குறைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. 

 

இந்தநிலையில் இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பேசியமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா தடுப்பூசிகளுக்கான ஐந்து சதவீத ஜி.எஸ்.டி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், "அறிவித்தபடி மத்திய அரசு 75% தடுப்பூசியை வாங்கும். அதற்கான ஜிஎஸ்டியையும் செலுத்தும். ஆனால் ஜிஎஸ்டியிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுடன் பகிரப்படும்" என கூறியுள்ளார்.

 

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கருப்பு பூஞ்சைமருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துக்கான ஜி.எஸ்.டி 12 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார உலைகள் மற்றும் வெப்பநிலை சோதனை உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆகவும், ஆம்புலன்ஸ் மீதான 12% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதங்கள் அமைச்சர்கள் குழு பரிந்துரைப்படி  செப்டம்பர் இறுதிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மருத்துவ தர ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் / ஜெனரேட்டர்கள் (தனிப்பட்ட இறக்குமதிகள் உட்பட), வென்டிலேட்டர்கள், வென்டிலேட்டர் மாஸ்க்குகள், பைபாப் இயந்திரம், கரோனா பரிசோதனை கிட்டுகள், ஆக்சிமீட்டர் (தனிப்பட்ட இறக்குமதி உட்பட) ஆகிய பொருட்கள்மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 12 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்படுள்ளன. சானிடைஸிர் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் செப்டம்பர் இறுதிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.