Skip to main content

இந்தியாவில் கரோனாவுக்கு 169 பேர் உயிரிழப்பு!!! 

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

   5,865 people in India corona


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 லிருந்து 5,865 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149-லிருந்து 169 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 473லிருந்து 478 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 540 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் 17 பேர் இறந்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்