ADVERTISEMENT

'அக்னிபத்' திட்டத்தில் சேர மூன்று நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்! 

02:48 PM Jun 27, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேருவதற்கு மூன்று நாட்களில் 56960- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கு வரும் ஜூன் 24- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று (26/06/2022) வரை மூன்று நாட்களில் 56960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் ஜூலை 5- ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14- ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவும் நிலையில், மூன்றே நாட்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT