உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன. அதே போல் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில் இந்தியாவில் 15,712 பேருக்கு கரோனா தொற்றுள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 506 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 488 லிருந்து 506 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2015ல் இருந்து 2230 ஆக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments