தமிழர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் நடந்த கோர சம்பவம்

5 Tamils ​​thrash at accident in Andhra Pradesh

ஆந்திராவில் கண்டெய்னர் லாரி மீது மோதி தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் அருகே பாகாலா பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் காரில் பயணித்துள்ளனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக அந்த கார் மோதியுள்ளது. இதில், அந்த கார் லாரியின் அடியில் புகுந்து முழுவதுமாக சிக்கி உருக்குளைந்து நசுங்கியது.

இந்த கோர விபத்தில், காரில் பயணித்த 7 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மீதமுள்ள 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு பாகாலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident Andhra Pradesh tamil peoples
இதையும் படியுங்கள்
Subscribe