102 நாட்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி... பல லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்...

ஹைதராபாத்திலுள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஹோட்டலில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார்.

taj banjara

இவர் இந்த ஹோட்டலில் சுமார் 102 நாட்கள் தங்கியுள்ளார். இவர் இத்தனை நாள் தங்கியதற்கு ரூ. 25.96 லட்சம் கட்டணமாக வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டிவிட்டார். மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.

ஹோட்டல் நிர்வாகம் இவர் பாதி பணம் கட்டியதால் லேசாக நம்பியுள்ளது. இதனையடுத்து ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் அந்த நபர் ஹோட்டலில் இருந்து ஓடிவிட்டார். சங்கரை காணவில்லை என்றதும், ஹோட்டல் நிர்வாகம் அவரை போன் மூலம் தொடர்புகொண்டுள்ளது.

ஆனால், பலனில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கையில் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Businessman hydrebad
இதையும் படியுங்கள்
Subscribe