சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக ஐந்து நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகிய ஐந்து பேரை கொலிஜியம் கொடுத்த பரிந்துரையை ஏற்று நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.