kashmir

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்இந்தியஅரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம்தேதி நீக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலிலும், வீட்டுசிறையிலும் வைக்கப்பட்டனர்.

Advertisment

இதனையொட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பின்னர் அங்கு இணையசேவை2ஜி வேகத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. இதன்பிறகு கடந்த ஆகஸ்டில், ஜம்மு- காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் மட்டும் சோதனை முயற்சியாக இணையசேவை4ஜி வேகத்திற்கு அதிகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் 18 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர்முழுவதும் 4ஜி இணைய சேவைமீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பாதுகாப்பு சூழ்நிலையைக் கவனமாக ஆராய்ந்த பிறகு, 4ஜி சேவை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment