accident

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலை பாதையில்பேருந்து விபத்துக்குள்ளாகி 47 பேர் பலியான சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலம்பாரிகார்வால் மாவட்டத்தில் நனிதண்டா என்ற மலை பகுதியில் 60 பேருடன்சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலை சாலையின் விளிம்பில் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisment

இன்று நடந்த இந்த கோர விபத்தில் இதுவரை 47 பேர் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம்உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கூறுகையில், இந்த கோர விபத்து மலை பள்ளத்தில் நடந்துள்ளதால் மீட்பு நடவடிக்கை பணிகளில்சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 47 பேரின்சடலங்களை மீட்டுள்ளோம். 12பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.மற்றவர்கள் பற்றிய நிலை தெரியவில்லை. தொடர்ந்து மீப்பு பணியில் இறங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Advertisment