Skip to main content

10 மாவட்டங்களில் அதிகமான கரோனா பாதிப்பு; முன்பதிவின்றி தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

union health secretary

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு கரோனாவின் இரண்டாவது அலையை நோக்கிச் செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்தியாகவேண்டும் வேண்டும் என மாநில முதல்வர்களை அறிவுறுத்தினார். இருப்பினும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாட்டின் 10 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், கரோனா அதிகமுள்ள மாநிலங்களில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியதாவது, புனே, மும்பை, நாக்பூர், தானே, நாசிக், அவுரங்காபாத், பெங்களூரு நகர்ப்புறம், நாந்தேடு, டெல்லி மற்றும் அகமதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நாட்டின், கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதில், வாராந்திர தேசிய சராசரி 5.65% ஆக இருக்கிறது. இதில் மகாராஷ்டிராவின் வாராந்திர சராசரி 23% ஆகவும், பஞ்சாப்பின் வாராந்திர சராசரி 8.82% ஆகவும், சத்தீஸ்கரின் வாராந்திர சராசரி 8% ஆகவும், மத்தியப் பிரதேசத்தின் வாராந்திர சராசரி 7.82% ஆகவும், தமிழ்நாடின் 2.50% ஆகவும், கர்நாடகாவின் வாராந்திர சராசரி 2.45% ஆகவும், குஜராத்தின் வாராந்திர சராசரி 2.2% ஆகவும், டெல்லியின் வாராந்திர சராசரி 2.04% ஆகவும் உள்ளது.

 

இந்த மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பரிசோதனை எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கவில்லை என அவர்களிடம் கேட்டோம். ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் கவனம் செலுத்தியவாறு மற்ற சோதனைகளையும் அதிகரிப்பது அவசியம். பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்தல் நடைபெறவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அதனை உண்மையிலயே செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களால் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாவிட்டால், அமைப்புகள் மூலம் தனிமைப்படுத்தப்படவேண்டும். 

 

இந்தியாவில் 807 பேர் இங்கிலாந்து வகை கரோனாக்களாலும், 47 பேர் தென்ஆப்பிரிக்க வகை கரோனாவாலும், ஒருவர் பிரேசில் வகை கரோனாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு 'கோ-வின்' செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இல்லையென்றால், அருகில் உள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்கு மாலை 3 மணிக்கு மேல், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றிதழுடன் சென்று கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.