Advertisment

40 வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்; கோரிக்கை வைத்த தமிழகம்

nn

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40 ஆவது கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றான தமிழகம் சார்பில் நேரடியாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில உறுப்பினர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

Advertisment

தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை திறந்துவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை வரும் மே 27ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்கப்பட வேண்டியஅளவான 9.19 டிஎம்சி நீரையும்ஜூலை மாதத்திற்கு 30.24 டிஎம்சிநீரையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா திறக்க வேண்டும் என தமிழக உறுப்பினர்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.

Advertisment
karnataka Tamilnadu cauvery verdict
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe