corona mutant

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கரோனாபரவல் அதிகரிப்பு குறித்து நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் இந்தியாவில் கரோனாவின்இரண்டாம் அலையைஉடனடியாகநிறுத்தியாக வேண்டும் எனத்தெரிவித்தார்.

Advertisment

இந்தநிலையில், இந்தியாவில் மரபணு மாற்றமடைந்த மூன்று வகை கரோனா வைரஸால்பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், தற்போது இங்கிலாந்து கரோனா, தென் ஆப்பிரிக்க கரோனா, பிரேசில் கரோனாஎன மூன்றுவகைமரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸால்பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 4 ஆம் தேதி வரை மரபணு மாற்றமடைந்த கரோனாக்களால், 242 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 158 பேர் மரபணு மாற்றமடைந்த கரோனாக்களால், புதிதாகப் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மரபணு மாற்றமடைந்தகரோனாக்கள், வேகமாகப் பரவக்கூடியதுஎன்றும், ஏற்கனவே கரோனாவிலிருந்து மீண்டவர்களையும்இந்த மரபணு மாற்றமடைந்தகரோனாக்கள் தாக்கும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Advertisment

இருப்பினும் கரோனாவால்பாதிக்கப்பட்டு மீண்டவர்களை, மரபணு மாற்றமடைந்த கரோனாதாக்கியதாக எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.