ADVERTISEMENT

கால் வழுக்கி மூடப்படாத பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன்..!

04:19 PM Sep 30, 2019 | suthakar@nakkh…

நாடு முழுவதும் பல பகுதிகளில் மூடப்படாத ஆள்துளை கிணறுகள், கால்வாய்கள், சாக்கடை குழிகளில் தவறி விழுந்து பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதே போல ஒரு சம்பவம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த சாக்கடை குழாயில் விழ முயன்ற சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாலையில் தேங்கிக் கிடந்த கழிவு நீரை ஒரு 4 வயது சிறுவன் தாண்ட முயற்சித்துபோது வழுக்கி கழிவு நீரில் விழுந்தான். பின்பு எழுந்திருக்க முயன்றபோது மீண்டும் வழுக்கி விழுந்ததில் கழிவு நீர் கால்வாயில் மூழ்கினான். உடனடியாக அந்த சாலையில் இருந்த வாலிபர் ஒருவர், அந்த சிறுவனை கால்வாயிலிருந்து தூக்கி காப்பாற்றினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT