படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி நான்கு வயது சிறுமி பெற்றோர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்ஜார்கண்டில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட்மாநிலம் கிழக்குசிம்பம்மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் உத்தம்மேடி-அஞ்சனாமகடாதம்பதியினர். இவர்கள் தங்களது இரண்டாவது மகளான 4 வயது சிறுமிநன்றாகபடிக்கவில்லை எனக்கூறி கைகளைக் கட்டி அடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்கையில் சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. உடனே சிறுமியின் உடலை சுமார் 40 கிலோமீட்டர் கொண்டு சென்ற பெற்றோர்கள் அவரது உடலை ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒருவாரத்திற்குபிறகு அக்கம் பக்கத்தினர் சிறுமிகுறித்துகேட்டபோது உத்தம்மேடியும், அஞ்சனாமகடாவும்முன்னுக்குபின் முரணாகபதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்துகாவல்துறைக்குபுகார் சென்ற நிலையில்,சிறுமியைபெற்றோர்கள் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது இருவரையும்போலீசார்கைது செய்து சிறையிலடைத்தனர்.