Skip to main content

வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த 4 பேர் கைது; 4 பெண்கள் மீட்பு

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

4 women arrested puducherry

 

புதுச்சேரி அழகிய சுற்றுலா பிரதேசம் என்பதாலும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கான வசதிகள் உள்ளதாலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து, தங்கி, சுற்றுலா தளங்களை பார்வையிட்டு மகிழ்வதுடன், நண்பர்களுடன் உற்சாக கேளிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் சூதாட்ட விடுதிகள், நடன விடுதிகள் உள்ளதுடன், பாலியல் தொழில்  நடத்தும் இடங்களும், அதில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

 

குறிப்பாக நகரின் பல்வேறு பகுதிகளிலும், நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சொகுசு தங்கும் விடுதிகளிலும் இதுபோன்ற உல்லாசங்கள் அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி சமீப காலமாக வீடுகளிலும் பெண்களை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை கொண்டு வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் நடைபெற்று அதிகரித்து வருகிறது.

 

அதையடுத்து புதுச்சேரியில் பாலியல் தொழிலை ஒழிக்க சீனியர் எஸ்.பி தீபிகா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எஸ்.பி பக்தவச்சலம் மேற்பார்வையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பல இடங்களில் பாலியல் தொழிலில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பாலியல்  தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீட்கப்படுகின்றனர். 

 

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் மூலக்குளம், பாரிஸ் நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் ரெட்டியார்பாளையம் போஸ்ட் ஆபீஸ் விதியை சேர்ந்த அந்தோணி (வயது 40), உழவர்கரை மடத்து வீதியைச் சேர்ந்த சங்கர் (எ) ஆரோக்கியநாதன் டில்ராக் (54) மற்றும் 3 பெண்கள் அங்கு இருந்தனர். விசாரணையில் வாடகைக்கு வீடு எடுத்து வெளியூர்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.

 

இதனைத் தொடர்ந்து அந்தோணி, சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதேபோல் உருளையன்பேட்டை அண்ணாநகரில் வாடகை வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அண்ணா நகரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கோவிந்தசாலை சேர்ந்த லதா(35), தவளைக்குப்பம் சரஸ்வதி (38), புதுச்சேரியை சேர்ந்த செந்தில்(35) ஆகியோர் வெளியூர் பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து செந்தில் தப்பி சென்றார். லதா மற்றும் சரஸ்வதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் இருந்த ஒரு பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதான லதா, சரஸ்வதி மீது ஏற்கனவே இதுபோன்று வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரெட்டியார் பாளையம், பெரியகடை, கோரிமேடு, ஒதி, உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ஆறு விபச்சார வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வழக்குகளில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த புரோக்கர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் புரோக்களிடம் இருந்து 14 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல்களில் அறை எடுத்து பாலியல் தொழில் செய்தால் போலீசார் எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர். அதனால் வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவது புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிக்கும் நபர்களின் வீட்டை தேடி வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலை அமோகமாக நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.