கோவையை சேர்ந்த 4 பேர் காசி உள்ளிட்ட தலங்களுக்கு சென்று விட்டு மீண்டும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக தமிழகம் திரும்பிய போது உத்தரப்பிரதேசத்தில் வெயில் தாங்காமல் இறந்ததாக கூறப்படுகிறது.
70 வயதுக்கு மேற்பட்ட இந்த 5 பேருக்கும் ஓடும் ரயிலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் வெப்பத்தால் இவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் பயணித்தபோது வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.