வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம்;வீடு நிலம் இழந்தோருக்கு 10 லட்சம்- பினராயி விஜயன்

flood

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கேரளாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும்வீடு மற்றும் நிலமிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன்அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29பேர் பலியாகியுள்ளனர். அதில் பலர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மழை தொடர்ந்துவருவதால், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும்திறந்துவைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், மேலும் பல பகுதிகளை சூழந்துகொண்டுள்ளன.

flood

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்நிலையில், வெள்ளம் பாதித்த இடுக்கி, ஆலப்புலா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களை விமான ஹெலிகாப்டரில் சென்று நேரில் ஆய்வு செய்துவருகிறார் கேரள் முதல்வர் பினராயி விஜயன். அவருடன், கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகரன், மாநில காவல்துறை தலைவர் லோக்நாத பெஹ்ரா ஆகியோர் உள்ளனர். மத்திய அரசிடம் இருந்து உதவி கோரியுள்ள கேரள அரசிற்கு தற்போது ராணுவ உதவிகள் வந்து சேர்ந்துள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் செல்ல முடியாத பல இடங்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் சென்று மக்களை மீட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும்வீடு மற்றும் நிலமிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெள்ளநிவாரணநிதியுதவியும் அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன்அறிவித்துள்ளார்.

flood Kerala Pinarayi vijayan
இதையும் படியுங்கள்
Subscribe