Skip to main content

வேகமெடுக்கும் கரோனா... டெல்லிக்கு வந்த 300 ரயில்பெட்டி கரோனா வார்டுகள்...

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

300 COVID care isolation coaches will be placed today at Anand Vihar

 

டெல்லியில் கரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் சூழலில், கரோனா பதித்தவர்களை தனிமைப்படுத்த இன்று டெல்லியில் சுமார் 300 ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் கடத்த இரு வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், இதில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய தலைநகரான டெல்லி. டெல்லியில் மட்டும் இதுவரை 41,000 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் டெல்லிக்கு 500 ரயில்பெட்டி கரோனா வார்டுகள் அனுப்பப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, இன்று முதற்கட்டமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக டெல்லிக்கு சுமார் 300 ரயில்பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ரயில்பெட்டிகள் டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வடக்கு ரயில்வே மக்கள் தொடர்பாளர், "லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள் மட்டுமே இங்கு வைக்கப்படுவார்கள். ரயில் பேட்டி பராமரிப்பு மற்றும் நோயாளி சிகிச்சையளித்தல் ஆகியவை மாநில அரசால் செய்யப்படும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.