Skip to main content

பேருந்து மோதியதில் தீப்பிடித்த கார்... காரில் கரிக்கட்டையான மூவர்!

Published on 06/01/2020 | Edited on 07/01/2020

கார்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தனியாருக்கு சொந்தமான பேருந்து அதிவேகமாக சென்றுள்ளது. அதே நேரத்தில் எதிரே வந்த காரின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி உள்ளது. இதன் காரணமாக இரண்டு வாகனங்களும் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.



இதற்கிடையே பேருந்தில் உள்ளவவர்கள் அனைவரும் பத்திரமாக இறங்கிய நிலையில், கார் முழுவதும் தீப்பிடித்தது. இதன் காரணமாக காரில் இருந்த மூவரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயில் கருகிய மூவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கு தந்தையுடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Eight year old school kid passes away in chidambaram accident

சிதம்பரம் நகரில் உள்ள காரைக்காட்டு சொக்கலிங்கம் தெருவில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மகள் ஜனுஷிகா (8). சிதம்பரம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஜனுஷிகா 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜம்புலிங்கம் இன்று காலை தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். 

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் புறவழிச் சாலையின் மேம்பாலத்தின் கீழே பைக் சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தவறி கீழே விழுந்த ஜனுஷிகாவின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சிறுமி ஜனுஷிகா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை ஜம்புலிங்கத்திற்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ஜம்புலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜனுஷிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பணிகளை செய்வதாலேயே இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Next Story

இந்தக் காரில் பயணித்தவர் உயிர் தப்பிவிட்டாரா? - வாய் பிளக்கும் மக்கள்! 

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Road accident near trichy Medical student recover safely

 

நாமக்கல் மாவட்டம், பட்லூர் சாலப்பாளையம், குடித்தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் யுவராஜ்(29). இவர், திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் சொந்த வேலையாக பெரம்பலூருக்குச் செல்ல தனது காரில் திருச்சியிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். 

 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரியை வேகமாக முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சிமெண்ட் லாரி மீது மோதிவிட்டு பின்னர் மற்றொரு லாரியின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. 

 

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டிச் சென்ற யுவராஜ் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அப்பளம் போல் நொறுங்கிய காரில் பயணித்த மாணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.