ரிக்சாஓட்டும் ஏழை முதியவர் ஒருவருக்கு மூன்றுகோடிரூபாய் வருமானவரிபாக்கியைக்கட்டும்படி வருமான வரித்துறைநோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம்மாநிலம்பாகல்பூர் அமர் காலனி பகுதியில்ரிக்சாஓட்டிவருபவர்முதியவரான பிரதாப்சிங். இவருக்கு அண்மையில் வருமானவரித்துறை சார்பில்நோட்டீஸ்ஒன்றுஅனுப்பப்பட்டது. அதில், தாங்கள்ஈட்டிய வருமானத்திற்கான வருமானவரிபாக்கி3,47,54,796 ரூபாயைவிரையில் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ந்த ஏழை முதியவரான பிரதாப் சிங் வருமான வரித்துறையின் இந்த அதிர்ச்சி நோட்டீஸ் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரிக்சாஓட்டுநர்பிரதாப்சிங்கின்பான் கார்டு மூலம் யாரோ ஜி.எஸ்.டி எண்ணைப் பெற்று மோசடியாகத் தொழில் செய்துவந்தது தெரியவந்தது. இந்த சம்பவம்தொடர்பாகத்தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.