பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியமைத்த பிறகு அக்கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
உறுப்பினர் சேர்க்கைக்கான தொடக்க நிகழ்ச்சியை கடந்த மாதம் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் மும்முரமாக கட்சிக்கு ஆள் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 6 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை முகாம்கள் மூலம் 3,78,67,753 உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அக்கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க பாஜக தலைமை இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அதைவிட கூடுதலாக ஒரு கோடி உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.