நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்... காதலன் எடுத்த விபரீத முடிவு..!

குஜராத் மாநிலம் பலான்புர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி (22). இவருக்கு அப்பகுதியில் உள்ள பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பெண் ராகுலை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் பெண் வீட்டார் வேறு ஒருவருக்கு தங்களது பெண்ணை மணமுடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த போன ராகுல் தற்கொலை செய்ய முடிவெடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மேல் ஏறியுள்ளார்.

ghj

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ராகுல் திடீரென மாடியில் இருந்து குதித்துள்ளார். அப்போது போலீசார் கீழே போர்வையை விரித்து வைத்திருந்ததால் சிறிய அடிகளுடன் ராகுல் உயிர்தப்பினார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

sucide attempt
இதையும் படியுங்கள்
Subscribe