Skip to main content

2000 ஆண்டுகள் பழமையான வர்த்தக வளாகம் கண்டுபிடிப்பு...

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

தமிழக எல்லை பகுதியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொட்டிபுரலு என்ற இடத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வர்த்தக மையம் ஒன்றை இந்திய தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது.

 

2000 year old trade centre found in andhra

 

 

திருப்பதி மற்றும் நெல்லூருக்கு அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வு பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது இந்த ஆய்வில், செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிட அமைப்பு கண்டறியப்பட்டது. மேலும் அந்த அமைப்போடு, ஒரு விஷ்ணு சிலை, செம்பு மற்றும் காரீய நாணயங்கள், ஆயுதங்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இடம் கடல்வழி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒன்றாக இருந்திருக்கும் எனவும், இங்கு கடல் கடந்து வெளிநாடுகளுடன் வாணிபம் செய்யப்பட்டிருக்கும் எனவும் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கண்டறியப்பட்டுள்ள இந்த அமைப்பு குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடைபெறும் போது, மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த பகுதியில் புவியியல், ரசாயன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.