இந்திய ராணுவத்தில் உள்ள 100 பணியிடங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

2 lakh women applied for 100 jobs in indian army

பொதுவாக ராணுவத்தின் போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் பெண்கள் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இதில் பெண்களை சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 100 பொது பணியிடங்களுக்கான ஆள் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆச்சரியம் தரும் வகையில் இந்த 100 பணியிடங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாத இதில் இதற்கான தேர்வு பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு பணி அம்பலா, லக்னோ, ஜபால்பூர், ஷில்லாங், பெல்காம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.