Advertisment

பாஜக ஆளும் மாநிலத்தின் முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

one day cm

Advertisment

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயதானபெண் பணியாற்றவுள்ளார்.

இந்தியாவில்தேசியபெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் நாளை (24.01.2021) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்ரகாண்டைச் சேர்ந்த19 வயதான கல்லூரி மாணவியான ஸ்ருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்றவுள்ளார்.

இதுகுறித்து ஸ்ருஷ்டிகோஸ்வாமி, "இது உண்மையா என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், மக்கள் நலனுக்காக உழைக்கும்போது இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" எனகூறியுள்ளார்.

Advertisment

ஒருநாள்முதல்வராக அவர் பணியாற்றும்போது அவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் ஆய்வு செய்யவுள்ளார்.ஸ்ருஷ்டிகோஸ்வாமிஏற்கனவே குழந்தைகள் மாநில சட்டமன்றத்தின் முதல்வராக இருந்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

cm one day uttarkhand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe