ADVERTISEMENT

17வயது சிறுவனை 2 வாரத்திற்கு மேலாக வீட்டில் மிரட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்!

10:54 AM Jul 16, 2018 | Anonymous (not verified)


28 வயது பெண் ஒருவர் 17 வயது சிறுவனை வீட்டில் வைத்து 2 வாரத்திற்கு மேல் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பீருமேடு அருகே உள்ள குமுளி பகுதியைச் சேர்ந்த விதவை பூஜா (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தினமும் பணிக்கு அலுவலக பேருந்தில் சென்று வருவார்.

இந்நிலையில் அந்த பேருந்தில் கிளீனராக பணி புரிந்து வந்த 17 வயது சிறுவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை பூஜா தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேலாக பூஜா வீட்டிலேயே சிறுவன் தங்கியிருந்துள்ளான். அப்பாது பூஜா சிறுவனை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு எற்பட்டுள்ளது. இதையடுத்து பூஜா பீருமேடு போலீசில் சிறுவனுக்கு எதிராக புகார் அளித்தார். அதில் சிறுவன் தன்னை அவதூறாக பேசி தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் அழைத்து விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக, தான் பூஜா வீட்டில் தங்கியிருந்ததாகவும் தன்னை மிரட்டி தினமும் பூஜா பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பூஜாவை போலீசார் கைது செய்து கோட்டயம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT