ADVERTISEMENT

ஓடும் காரில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

11:54 AM Apr 24, 2018 | Anonymous (not verified)

காரில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது கிரேட்டர் நொய்டா. இங்கு கடந்த 18ஆம் தேதி பள்ளி சென்றிருந்த 16 வயது சிறுமி, வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது அங்குள்ள பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு அருகாமையிலுள்ள பகுதியில், சிறுமி குடிபோதையில் சுயநினைவின்றி கிடந்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையினரிடம் நடந்ததை வாக்குமூலமாக அளித்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி பேருந்தை தவறவிட்ட சிறுமி, நடந்தே வீட்டிற்கு செல்ல முடிவுசெய்துள்ளார். அப்போது காரில் வந்த சிறுமியின் தூரத்து உறவினர் மற்றும் சிறுமியுடன் பயிலும் மாணவன் இருவரும், சிறுமியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். சிறுமி காரில் ஏறியவுடன் மூன்றாவதாக காருக்குள் இருந்த நபர் சிறுமியின் வாயில் துணியைத் திணித்து கூச்சலிடமுடியாத வண்ணம் செய்துள்ளார். இதையடுத்து ஓடும் காருக்குள் சிறுமியை மாறிமாறி வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், சிறுமி வாயிலும் மது ஊற்றிய நிலையில், அவர் சுயநினைவை இழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்களின் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு, போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT