Advertisment

'ஒரே நாளில் 3,254 கரோனா தொற்று!!! 149 பேர் பலி' மராட்டியத்தை சுழன்றடிக்கும் கரோனா!

jk

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisment

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று மட்டும் மராட்டியத்தில் 2,259 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 149 பேர் இன்று ஒரு நாளில் உயிரிழந்துள்ளனர். இது சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe