Advertisment

பட்டியலின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 14 பேர்; இரண்டு வருடங்களாக நடந்த கொடூரம்!

14 people assaulted a dalit girl over two years andhra pradesh

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை, 14 பேர் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஆனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது பட்டியலின சிறுமி. இவர் நேற்று (09-06-25) போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், சிறுவன் உள்பட 14 பேர் இரண்டு வருடங்களில் மாறி மாறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், நேற்று (09-06-25) வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற 7 பேரும் தலைமறைவாகிவிட்டதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அச்சம்பல்லி வர்தன் (21), தலாரி முரளி (25), படகோர்லா நந்தவர்தன் ராஜ் (23), அரஞ்சேரு நாகராஜு (51), போயா சஞ்சீவ் (40), புதிதா ராஜண்ணா (49) என்பது தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் இரண்டு வருட காலத்தில் மாறி மாறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அம்மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
women incident police Dalit woman Dalit Andhra Pradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe