ADVERTISEMENT

மராட்டியத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 139 பேர் பலி!

09:29 PM Jun 05, 2020 | suthakar@nakkh…



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 66 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியத்தில் கரோனா தொற்று மிக அதிக அளவில் இருந்து வருகின்றது. இன்று 2,436 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தமாக 80,229 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,849 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 139 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் 35,156 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT