Advertisment

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு! 

12 Tamil fishermen captured by Sri Lankan Navy

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்திருப்பது இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நெடுத்தீவு அருகே எல்லை தாண்டியதாக கூறி ஒரு விசைப்படகுடன் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறைபிடித்துள்ளனர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்களைத் தாக்குவது, வலைகள் உட்பட மீன்பிடி பொருட்களைச் சேதப்படுத்துவது, பறிப்பது, கைது செய்வது போன்ற நிகழ்வுகளால் தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பாக இராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Fishermen srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe