Skip to main content

புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்கள்; ஆக்கப்பள்ளத்தில் பரபரப்பு

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

 12 people arrested for cooking and eating tiger; excitement in Akappallam

 

கோடைக்காலம் நெருங்கும் காலகட்டத்தில் புலி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் வனத்தை ஒட்டியுள்ள கிராமப் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகும். ஆனால், ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்கு வந்த புலி உயிரிழந்த நிலையில், புலியை கிராம மக்கள் சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது ஆக்கப்பள்ளம் கிராமம். வனப்பகுதியை ஒட்டிய இந்தப் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி வனவிலங்குகள் படையெடுத்து வருவதும், அங்குள்ள பயிர்களை சேதம் செய்வதும் வாடிக்கையாம். இதனைத் தவிர்ப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் புலி ஒன்று அந்தப் பகுதியில் நடமாடியது. இதனையறிந்த வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சில பகுதிகளில் கேமராக்களை பொருத்தி இருந்தனர். ஆனால், நடமாட்டத்தில் இருந்த புலியானது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதில் அதைவிட அதிர்ச்சி தரும் விதமாக மின்வேலியில் சிக்கி உயிரிழந்த புலியை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டிருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இறந்த புலியின் இறைச்சியை பங்கு போட்டுக் கொள்வதில் அந்த கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக இந்த விவகாரம் வனத்துறைக்கு புகாராக சென்றதைத் தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் புலியின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 12 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.