up

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம் ஷிகார்பூரில்,10ஆம் வகுப்பு படித்து வந்தஇரண்டு மாணவர்களிடையே அமருமிடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அமர வைத்துள்ளார்.

Advertisment

இருப்பினும் ஆத்திரம் அடங்காதஒரு மாணவன், துப்பாக்கியை எடுத்துவந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்டமாணவனைமூன்றுமுறை சுட்டுள்ளான். இதில்அந்த மாணவனின்தலை, நெஞ்சு மற்றும் வயிற்றில்குண்டுபாய்ந்து உயிரிழந்தான். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், வானத்தைநோக்கி சுட்டுக்கொண்டே அங்கிருந்து ஓடமுயல, அப்பள்ளியின் ஆசிரியர்கள் அவனை மடக்கிப் பிடித்து, துப்பாக்கியைப் பிடுங்கியதோடு போலீஸாரிடமும் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்தபோலீஸார், "துப்பாக்கிச் சூடு நடத்தியமாணவன், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் தனது(ராணுவத்தில் பணியாற்றும்) மாமாவின்துப்பாக்கியை எடுத்துவந்து, சகமாணவனை சுட்டதாகவும், அந்த மாணவனின்பையில்நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

Advertisment

துப்பாக்கிச் சூடு நடத்தியமாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மாணவன் பயன்படுத்தியதுப்பாக்கியும்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வகுப்பறையில் அமரும்இடம் தொடர்பான பிரச்சனையில், 10 ஆம் வகுப்பு மாணவன்,சகமாணவனை சுட்டுக் கொன்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.