Skip to main content

1,000 அனுப்பினால் 10,000; அமலா சாஜி பேச்சைக் கேட்ட ஐடி ஊழியருக்கு அதிர்ச்சி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
NN

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக பிரபலமானவர்கள் அமலா சாஜி மற்றும் அவருடைய சகோதரி அமிர்தா சாஜி. அமலா சஜிக்கு 4.1 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். சினிமா காட்சிகளுக்கு பிரத்தியேக உடைகளை அணிந்து கொண்டு ரீல்ஸ் வெளியிடுவது இவர்களது வேலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இணைய பிரபலமான அமலா சாஜியின் பேச்சை கேட்டு ஐ.டி ஊழியர் பணத்தை இழந்ததாக போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இன்ஸ்டா பிரபலமான அமலா சாஜி அவருடைய இணையதள பக்கத்தில் 'ஆன்யா ஃபாரெக்ஸ்' என்ற தன்னுடைய தோழியை அறிமுகப்படுத்தி அவர் ஆன்லைன் ட்ரெண்டிங் டிரேடிங் தொழில் செய்து வருவதாகவும், இதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். நானும் பெற்றுள்ளேன், என விளம்பரம் செய்துள்ளார். தன்னை பின்பற்றுபவர்கள் விருப்பப்பட்டால் அவரை தொடர்பு கொண்டு நீங்களும் ஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய ஐடி ஊழியர் ஒருவர் 'ஆன்யா ஃபாரெக்ஸ்' என்ற சமூக வலைத்தள பக்கத்தை குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய பெண், ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 50 நிமிடத்தில் 10,000 ரூபாயாக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய ஐடி ஊழியர் அவர் அனுப்பிய கியூ ஆர் கோடை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் முதலில் செலுத்தியுள்ளார். 'கிரிப்டோ வேர்ல்ட்' என்ற செயலியின் மூலம் உங்களுடைய பணத்தை வைத்து டிரேடிங் செய்து தற்பொழுது 12,999 ரூபாய் லாபம் வந்துள்ளது என பதிலுக்கு அந்த பெண் ஸ்கிரீன்ஷாட் அனுப்பி உள்ளார்.

தொடர்ந்து இதுபோன்று சம்பாதிக்க வேண்டும் என்றால் 9 ஆயிரம் ரூபாய் பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தினால் மொத்தமாக 22 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி உள்ளார். ஆனால் எனக்கு என்னுடைய பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என கேட்டுள்ளார் ஐடி ஊழியர். ஆனால் இப்படியாக குறுஞ்செய்திகள் சென்று கொண்டிருந்த பொழுது ட்ரேட் செய்ததில் உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வந்துள்ளது என மேலும் ஆசை காட்டி, அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மொத்தமாக டெபாசிட் பணம் உள்ளிட்டவற்றை அனுப்பினால் மொத்தமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தருவதாக ஐடி ஊழியரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். ஜிபே எண்ணையும் அந்த பெண் வாங்கியுள்ளார். ஆனால் பத்து முதல் 20 நாட்களாகியும் பணம் வந்து சேரவில்லை. தான் மோசடியில் சிக்கியதை அறிந்த அந்த ஐடி ஊழியர் அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.