Skip to main content

பான்- ஆதார் இணைக்க இன்று முதல் ரூபாய் 1000 அபராதம்!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

1000 rupees fine for linking PAN-Aadhaar from today!

 

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க அபராதத்துடன் கூடிய அவகாசம் இன்று (01/07/2022) முதல் அமலுக்கு வருகிறது. 

 

பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைக்க, கடந்த மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பலமுறை ஏற்கனவே, அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 31- ஆம் தேதிக்குள் இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30- ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது முடிவுக்கு வந்த நிலையில், இன்று (01/07/2022) முதல் ரூபாய் 1,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை, இந்த அபராதத்துடன் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. 

 

1000 rupees fine for linking PAN-Aadhaar from today!

 

அதன் பிறகும் இணைக்காதவர்களின் பான் கார்டு எண்கள் முடக்கப்படும் எனத் தெரிகிறது. பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்