100 கோடி ரூபாய் நிவாரணம் தேவை! - மத்திய அரசுக்குப் புதுவை முதல்வர் நாராயணசாமி கோரிக்கை!

 100 crore relief needed- Puducherry Chief Minister Narayanasamy's request to the Central Government!

'நிவர்' புயல் காரணமாகதமிழகம் மற்றும் புதுவையில்கடலோர மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டது. புயல் சேதங்களைப் பார்வையிட மத்திய குழு, வரும் திங்கள் கிழமைதமிழகம் வரவுள்ள நிலையில், புதுவையிலும் மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புயல் சேதத்திற்கு ரூபாய் 100 கோடிநிவாரணம் வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கைவைத்து, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'நிவர்' புயலால்புதுச்சேரியில் ஏராளமானவீடுகள், சாலைகள்பெரும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். எனவே 'நிவர்' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபுதுச்சேரிக்கு, இடைக்கால நிவாரணமாக, 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

letter modi Narayanasamy nivar cyclone Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe