Skip to main content

அதிக லஞ்சம் வாங்கும் மாநிலம் எது..? பட்டியல் வெளியீடு... தமிழகத்தின் இடம்...

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

TRANSPARENCY INTERNATIONAL என்ற நிறுவனம் நடத்திய ஊழல் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

1 in 2 Indians paid a bribe in 2019

 

 

இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் சுமார் 1,90,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவில், ஊழல் அதிகமுள்ள மாநிலம் என்ற பெயரை ராஜஸ்தான் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் ஆறாவது இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 100-ல் 62 பேர் அரசு அலுவலகங்களில் தங்களது வேலை நடக்க வேண்டும் என லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நிலம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக 41 சதவிகிதம் பேரும், நகராட்சி நிர்வாகங்களில் பணி நடக்க 19 சதவிகிதம் பேரும், காவலர்களுக்கு 15 சதவீதம் பெரும் லஞ்சம் தருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கணக்கெடுப்பின்படி, 50% க்கும் அதிகமான இந்தியர்கள் 2019 ஆம் ஆண்டில் ஒரு முறையாவது அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். 82% பேர் ஊழலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது நடவடிக்கைகள் பயனற்றவை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல 64% மக்கள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கூறியுள்ளனர். லஞ்சம் வாங்குவது சில மாநிலங்களில் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவிகிதம் லஞ்சம் பெறுவோர் எண்ணிக்கை கூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.