Advertisment

திண்டுக்கல் அருகே இளைஞர் கொடூரக் கொலை; போலீஸ் தீவிர விசாரணை!

Untitled-1

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பழைய வக்கம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில், தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து உள்ளூர் மக்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் குழு, உடலை ஆய்வு செய்து விசாரணை நடத்தியது. பரிசோதனையில், பாதிக்கப்பட்டவர் மைக்கல் பட்டியைச் சேர்ந்த பிச்சையின் மகன், 32 வயதான சிவகுமார் என்பது தெரியவந்தது. மேலும், சிவகுமாரின் தலையை காவலர்கள் அப்பகுதியில் தேடியபோது, அது எங்கும் கிடைக்கவில்லை. 

கொலையாளிகள் தலையை வெட்டி எடுத்துச் சென்றார்களா அல்லது வேறு இடத்தில் வீசிவிட்டார்களா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார், எதற்காக இந்தக் கொடூரச் செயல் நடந்தது என்பது குறித்து காவலர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பயங்கரமான கொலைச் சம்பவம், பழைய வக்கம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe