சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த சரத்​கு​மார், வெங்​கடேஷ் மற்றும் சவுத்ரி ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு ஒன்றைத் தாக்​கல் செய்​திருந்தனர். அந்த மனுவில், “புதிதாக உரு​வாக்​கப்​பட்ட தாம்​பரம் மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்​காக, சோழிங்​கநல்​லூரில் எங்​களுக்கு சொந்தமான 4 மாடி கட்​டடத்தை குத்​தகை அடிப்​படை​யில் வாடகைக்கு வழங்​கியிருந்​தோம். அதற்கு மாதம் 10 லட்​சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்​ண​யம் செய்​திருந்​தோம். 

அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்​திடப்​பட்​டது. இருப்பினும் நாங்கள் மேற்கொண்ட ஒப்​பந்​தப்​படி வாடகை வழங்காமல் பொதுப்​பணித்துறை​யின் வழிகாட்டி மதிப்​பீட்​டின்​படி மாதம் 6 லட்​சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் என நிர்​ண​யம் செய்து வாடகை வழங்​கப்​படு​கிறது. இதன் காரண​மாக குத்​தகைக் காலத்தை நாங்​கள் நீட்​டிக்​க நாங்கள் விரும்ப​வில்​லை. அதோடு எங்​களது அனுமதியின்றி பல்வேறு கட்​டு​மானப் பணி​களை தற்போது மேற்​கொண்டு வருகின்றனர். எனவே எங்​களது கட்டடத்தை காலி செய்து எங்​களிடம் ஒப்​படைக்க உத்​தர​விட வேண்டும்” எனத் தெரிவித்திருந்​தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி இன்று (11.08.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டடத்திற்கான வாடகையை ரூ. 6 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக உயர்த்தியும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் தொகை ரூ. 2.18 கோடியை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் (31.12.2025) மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.