தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது.  தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பொழிந்து வரும் நிலையில் தென்காசியின் பிரபல சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisment

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும்  காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு தடுப்பு வரை வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஏற்கனவே அருவியில் குளிக்க இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையானது இன்றும் தொடர்கிறது. அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை போலீசார் நூறடிக்கு முன்னேயே தடுத்து நிறுத்தி அருவியில் குளிக்கக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisment