Skip to main content

'உயிர் பிரியும் ஒரு பயணம்...' - லதா சரவணன் 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Writer Latha Saravanan condolence to Coromandel express accident

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு இரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை அடுத்தடுத்து மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டு இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விபத்து குறித்து இரயில்வே துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்திற்கு முதலமைச்சர்கள், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

 

NN

 

இந்நிலையில் எழுத்தாளர் லதா சரவணன், இந்த கோர விபத்தின் வலியைக் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது கவிதை;

 

இரும்பு பெட்டிகளுக்கு நடுவில்...
எத்தனை ஏக்கங்கள் நசுங்கியதோ...

 

வலியின் கூக்குரல்களுக்கு சில
மணித்துளிகளுக்கு முன்னால்...

 

நிரப்பப்பட்ட பலூனின் காற்றாய்...
சுவாசம் ஒரு முன்னறிவிப்பினை 
அந்த ஆகீரதியான சக்கரங்களுக்கு தரவில்லையோ...

 

ஆபத்து என்னும் எச்சரிக்கை செய்யும் 
இயற்கைப் பறவையின் ஒலி...
தண்டவாளங்களின் தாலாட்டில்
உறங்கிப் போயிருக்க வேண்டும்...    

 

என்றுமே பிரம்மாண்டமாய் விழி விரிக்கும்
வாகனத்தில் இது இறுதிப் பயணம் 
என்பதை இறந்தவர்கள் உணர்ந்திருக்கவில்லை...

 

தந்தையை சந்திக்கப் போகும் 
பச்சிளம் பிள்ளையின் அழுகுரல் அடங்கி 
வெகு நேரம் ஆகிறது. 

 

கிழிந்து தொங்கும் சதைகளையும் 
ஒழுகும் உதிரத்தையும் மறந்து…
எஞ்சிய இதயக்கூட்டில் ஏறியிறங்கும்...
பெருமூச்சு அடங்கும் நேரம் அறியாமல்...

 

உடன் வந்தவர்களை தேடும் உயிர் பிரியும் ஒரு பயணம்.
அந்த ரயில் கிலுகிலுப்பை சுமந்த 
குழந்தையின் குதூகலித்தில் பயணித்தது...
சிதறிய மாணிக்கப்பரல்களைப் போல 
தன் உடலைச் சிதைத்துக் கொண்டு...

 

கொலைகளத்தில்... தனியாய்....
உயிரற்ற உடல்களோடு...
நாசிக்கிழிக்கும் குருதி வாசனையோடு...
ஒரு இறைதூதருக்காய் மீட்பருக்காய் 
வெகுநேரம் காத்திருக்கிறது...

 

ஒளிரும் அலைபேசியின் முகப்பு விளக்குளில்
இருள் படிந்து போயிருப்பதை அறியாமல்…
அழைப்புகளின் மணியோசை அடித்து அடித்து
ஒய்ந்து போகிறது.  

 

காலையில் வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள்
கண்முன்னே பொய்த்துப்போனதைக் கண்டு 
தடம் மாறிய ரயில் பெட்டிகள் கூட மனமுடைந்து 
மண்டியிட்டு மன்னிப்புகேட்கிறது.

 

- லதா சரவணன்

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரயிலில் பயங்கர தீ விபத்து; விரைந்த தீயணைப்புத் துறையினர்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Terrible train fire in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நான்டெட் நகரில் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில், பூர்ணா - பார்லி வழிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 07599) நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து, மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.