Skip to main content

மெரினாவில் போராட்டம் நடத்த தடை ஏன்? : அய்யாக்கண்ணு - அரசு தரப்பு  வாதங்கள்

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
ayyakkannu

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டிருந்தார் அய்யாக்கண்ணு.  மெரினாவில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்த அய்யாக்கண்ணுவிற்கு தனி நீதிபதி ராஜா அனுமதி அளித்து இருந்தார்.   மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்தது.   இதையடுத்து நீதிபதிகள்  மணிக்குமார், பவானி சுப்புராயன் ஆகியோர் அய்யாக்கண்ணு போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  அனுமதித்து பிற்பகலில் வெளியான உத்தரவுக்கு அடுத்த சில மணி நேரங்களில் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

உண்ணாவிரதப்போராட்டம் நடத்த மாற்ற இடத்தை தேர்ந்தெடுக்க அய்யாக்கண்ணுவுக்கு அறிவுறுத்தினர்.   மாற்று இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினால் பரிசீலிக்க உத்தரவிட்டார்கள் அரசு மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்புராயன் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர். மாற்று இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதமிருக்க அனுமதி கோரினால் காவல்துறை பரிசீலிக்க உத்தரவிட்டனர்.

 

வழக்கு விசாரணையின் போது , போராட்டத்திற்கு அரசு அனுமதி மறுக்கவில்லை.  இடத்தைத்தான் தீர்மானிக்கிறோம்.  போராட்டம் நடத்தும் இடத்தை முடிவு செய்யும் அதிகாரம் காவல் ஆணையருக்கு மட்டுமே உள்ளது.  சென்னை மாநகராட்சி மூலம் மெரினா கடற்கரை பராமரிக்கப்பட்டு வருகிறது.   மக்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் இடம் பெரினா.  ஒருவரை அனுமதித்தால் ஒவ்வொருவராக வருவர்.  

 

2017ல் அனுமதியின்றி கூடிய சிலரால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கூட்டமாக மாறியது.  உண்ணாவிரத போராட்டத்திற்கு வள்ளுவர் கோட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுக்கலாம்.  போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்றுதான் மனுதாரர் கூறியுள்ளார் என்று அரசு தரப்பு வாதிட்டது.

 

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மெரினாவில் பல போராட்டங்கள்  நடந்துள்ளன.  2003ல் பேனர்கள் கிழிக்கப்பட்ட பிரச்சனைக்கு பிறகுதான் மெரினாவில் அனுமதி மறுக்கப்படுகிறது என்று அய்யாக்கண்ணு தரப்பு வாதிட்டது.  

 

மெரினாவில் போராட்டம் நடத்த 2003ல் இருந்து யாரையும் அனுமதிப்பதில்லை என்று அரசு தரப்பு வாதிட்டது.  முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் சேப்பாக்கத்தில்தான் உண்ணாவிரதம் இருந்தனர் என்றும் உண்ணாவிரதத்திற்கு அனுமதித்தால் நாளை 25 அமைப்புகள் போராட்டம் நடத்த காத்திருக்கிறது என்றும் அரசு தரப்பு வாதிட்டது.  

 

தனி நீதிபதி உத்தரவு தவறான முன் உதாரணமாகிவிடும் என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதிட்டார்.

 

இதையடுத்து, சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி மக்கள் அதிகம் கூடினால் என்ன செய்வீர்கள்? போராட்டம் நடத்த கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை அனுமதிக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.