பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன்? என எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பினார். அப்போது எஸ்.வி.சேகர் வரும் 20ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் பேரவையில் விவாதிக்க கூடாது என சபாநாயகர் தனபால் பதில் கூறினார்.
தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெறும் வழக்கில் ஏன் நடவடிக்கை இல்லை? என எஸ்.வி.சேகர் குறித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு, நீதிமன்ற உத்தரவுக்கு முன்பு பேசியிருந்தால் விவாதித்திருக்கலாம்.தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் பேரவையில் விவாதிக்க கூடாது. 20ஆம் தேதிக்கு பிறகு இதுகுறித்து பேசலாம் என சபாநாயகர் பதிலளித்து. மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதி மறுத்தார்.
எஸ்.வி.சேகர் குறித்து தொடர்ந்து பேச அனுமதிக்காததைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,
தமிழக அரசின் உயர் அதிகாரியின் உறவினர் என்பதால் எஸ்.வி.சேகரை கைது செய்ய தயக்கம் காட்டப்படுகிறது. விழாக்கள், நிகழ்ச்சிகளில் எஸ்.வி.சேகர் சுதந்திரமாக பங்கேற்கிறார். உச்சநீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் அவரை இதுவரை கைது செய்யாதது ஏன்? மத்திய அமைச்சர் முன்னிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
உயர்அதிகாரியின் உறவினர் என்பதால் எஸ்.வி.சேகரை கைது செய்ய தயக்கமா? சீறிய மு.க.ஸ்டாலின்
சார்ந்த செய்திகள்
Next Story
“ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் விலகுகிறேன்”- சுப்புலட்சுமி ஜெகதீசன்
திமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். முதல்வர், கட்சி மற்றும் அரசுப்பணிகளை நாடே பாராட்டும் வகையில் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், “2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.
தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின். அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும். கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
Next Story
“ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு முதல் மரியாதை’; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு இட்லி கடையை துவங்கினார். கடந்த 30 வருடங்களாக கடையை நடத்திக்கொண்டு வரும் இவர் வெகு காலமாக தனது கடையில் இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். அத்தியாவசியப் பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி போன்ற விலையேற்றங்கள் பல வந்தாலும் இட்லியை ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் இட்லிக்கடை இருக்கும் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த விலையில் காலை உணவினை அருந்தி தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் அண்ணாவின் பிறந்த நாளான இன்று 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
1920 களில் ஜஸ்டிஸ் பார்ட்டி சென்னை மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு திட்டத்தை துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழக முதல்வரால் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. ஜஸ்டிஸ் பார்டியால் 1920களில் துவங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்று அதன் நூற்றாண்டு விழாவை எட்டியுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையிலும் மேலும் விரிவு படுத்தும் நோக்கிலும் துவக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை துவங்கியது முதல் நடந்த வரலாற்று சம்பவங்களை தொகுத்து தமிழக அரசின் செய்தி தொலைத் தொடர்பு துறையால் புத்தகமாக கொண்டுவரப்பட்ட ஆவண நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கமலாத்தாள் பாட்டி பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒடுக்கப்பட்டோர் பிள்ளைகள், ஏழை எளியோர் வீட்டுப் பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்கு செல்வது தடைபடக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கத்தால் இத்திட்டம் துவங்கப்பட்டது. அன்றுதான் கடந்த நூற்றாண்டின் மாபெரும் இயக்கத்துக்கான விதை தூவப்பட்டது. அதற்காகவே சுயமரியாதை சமூக நீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி இட ஒதுக்கீடு தரப்பட்டது. தகுதியோ சாதியோ கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் நினைத்தனர். அவர்கள் நினைத்த திட்டத்தை நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என நினைக்கும் பொழுது உள்ளபடியே நான் அளவிட முடியாத மகிழ்ச்சிக்கு ஆளாகிறேன்” என கூறினார்.